897குரங்குகள் மலையை நூக்கக்
      குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
      சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச
      வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
      அளியத்தேன் அயர்க்கின்றேனே             (27)