899ஊர் இலேன் காணி இல்லை
      உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
      பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
      கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண்? அம்மா
      அரங்க மா நகருளானே             (29)