901தவத்துளார் தம்மில் அல்லேன்
      தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
      உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
      துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
      அரங்க மா நகருளானே             (31)