906மழைக்கு அன்று வரை முன் ஏந்தும்
      மைந்தனே மதுர ஆறே
உழைக் கன்றே போல நோக்கம்
      உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது
      ஒழிவதே உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி
      அரங்கமா நகருளானே             (36)