911வானுளார் அறியல் ஆகா
      வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலைச்
      சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும்
      ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம்
      தருவரேல் புனிதம் அன்றே             (41)