914பெண் உலாம் சடையினானும்
      பிரமனும் உன்னைக் காண்பான்
எண் இலா ஊழி ஊழி
      தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து
      ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ?
      களைகணாக் கருதுமாறே             (44)