93வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்
      வேழத்தின் கருங்கன்று போல்
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்
      சிறு புகர்பட வியர்த்து
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து
      ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே
      தளர்நடை நடவானோ             (9)