947 | வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (1) |
|