948ஆவியே அமுதே என நினைந்து உருகி
      அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
      பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
      சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (2)