960மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர
      ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணிதர
      இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்
      கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு
      பிரிதி சென்று அடை நெஞ்சே (4)