961கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல்
      அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை அலர்மகள்-அவளொடும்
      அமர்ந்த நல் இமயத்து
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை
      அளை மிகு தேன் தோய்த்துப்
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே    (5)