முகப்பு
தொடக்கம்
964
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை
இரும் பசி-அது கூர
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே (8)