முகப்பு
தொடக்கம்
965
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு
உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை
இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (9)