965ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு
      உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை
      இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
      தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு
      பிரிதி சென்று அடை நெஞ்சே (9)