966கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை
      முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு
      பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்
      கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு
      அரு வினை அடையாவே             (10)