முகப்பு
தொடக்கம்
966
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை
முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு
பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்
கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு
அரு வினை அடையாவே (10)