977ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று
      இணை-அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரளத்
      தடஞ் சிலை குனித்த என் தலைவன்-
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த
      தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (1)