987கலையும் கரியும் பரிமாவும்
      திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாகச்
      சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
      மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (1)