989உலவு திரையும் குல வரையும்
      ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளும் ஆய்
      நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர்-தம் பெருமான்
      மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (3)