முகப்பு
தொடக்கம்
992
தாய் ஆய் வந்த பேய் உயிரும்
தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
சாளக்கிராமம் அடை நெஞ்சே (6)