992தாய் ஆய் வந்த பேய் உயிரும்
      தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
      குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
      இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (6)