994வெந்தார் என்பும் சுடு நீறும்
      மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும்
      திரியும் பெரியோன்-தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன
      இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (8)