| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| கண்ணன்திருவவதாரம் | 
					
			
			
      | | 12 | வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
 எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
 கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 13 | ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
 பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
 ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 14 | பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
 ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
 வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 15 | உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
 செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
 அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே    (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 16 | கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத் தண்டினர் பறியோலைச் சயனத்தர்
 விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
 அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 17 | கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
 ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
 வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 18 | வாயுள் வையகம் கண்ட மடநல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
 பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
 மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 19 | பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் எத் திசையும் சயமரம் கோடித்து
 மத்த மா மலை தாங்கிய மைந்தனை
 உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 20 | கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
 ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
 மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 21 | செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
 மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
 பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |