முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
கண்ணன்திருவவதாரம் |
12 | வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே (1) |
|
|
|
|
|
13 | ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே (2) | |
|
|
|
|
14 | பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார் ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு- வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே (3) | |
|
|
|
|
15 | உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே (4) | |
|
|
|
|
16 | கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத் தண்டினர் பறியோலைச் சயனத்தர் விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர் அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் (5) | |
|
|
|
|
17 | கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால் ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே (6) | |
|
|
|
|
18 | வாயுள் வையகம் கண்ட மடநல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே (7) | |
|
|
|
|
19 | பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் எத் திசையும் சயமரம் கோடித்து மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே (8) | |
|
|
|
|
20 | கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய (9) | |
|
|
|
|
21 | செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே (10) | |
|
|
|
|