| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| கண்ணனது திருமேனியழகு | 
					
			
			
      | | 22 | சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
 பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
 பாதக் கமலங்கள் காணீரே
 பவள வாயீர் வந்து காணீரே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 23 | முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்
 பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
 ஒத்திட்டு இருந்தவா காணீரே
 ஒண்ணுதலீர் வந்து காணீரே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 24 | பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
 இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
 கணைக்கால் இருந்தவா காணீரே
 காரிகையீர் வந்து காணீரே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 25 | உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
 பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
 முழந்தாள் இருந்தவா காணீரே
 முகிழ்முலையீர் வந்து காணீரே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 26 | பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
 மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
 குறங்குகளை வந்து காணீரே
 குவிமுலையீர் வந்து காணீரே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 27 | மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
 அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
 முத்தம் இருந்தவா காணீரே
 முகிழ்நகையீர் வந்து காணீரே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 28 | இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப் பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
 நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
 மருங்கும் இருந்தவா காணீரே
 வாணுதலீர் வந்து காணீரே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 29 | வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும்
 நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
 உந்தி இருந்தவா காணீரே
 ஒளியிழையீர் வந்து காணீரே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 30 | அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
 பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
 உதரம் இருந்தவா காணீரே
 ஒளிவளையீர் வந்து காணீரே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 31 | பெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை
 குரு மா மணிப்பூண் குலாவித் திகழும்
 திருமார்வு இருந்தவா காணீரே
 சேயிழையீர் வந்து காணீரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 32 | நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
 வாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான்
 தோள்கள் இருந்தவா காணீரே
 சுரிகுழலீர் வந்து காணீரே            (11)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 33 | மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
 நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
 கைத்தலங்கள் வந்து காணீரே
 கனங்குழையீர் வந்து காணீரே             (12)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 34 | வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
 அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
 கண்டம் இருந்தவா காணீரே
 காரிகையீர் வந்து காணீரே             (13)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 35 | எம் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
 தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்
 செந் தொண்டை வாய் வந்து காணீரே
 சேயிழையீர் வந்து காணீரே             (14)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 36 | நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
 வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
 மூக்கும் இருந்தவா காணீரே
 மொய்குழலீர் வந்து காணீரே             (15)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 37 | விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து
 திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
 கண்கள் இருந்தவா காணீரே
 கனவளையீர் வந்து காணீரே             (16)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 38 | பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்யத் திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
 உருவு கரிய ஒளி மணிவண்ணன்
 புருவம் இருந்தவா காணீரே
 பூண்முலையீர் வந்து காணீரே             (17)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 39 | மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
 வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை
 திண்ணம் இருந்தவா காணீரே
 சேயிழையீர் வந்து காணீரே            (18)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 40 | முற்றிலும் தூதையும் முன்கைமேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப்
 பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
 நெற்றி இருந்தவா காணீரே
 நேரிழையீர் வந்து காணீரே             (19)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 41 | அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
 மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்
 குழல்கள் இருந்தவா காணீரே
 குவிமுலையீர் வந்து காணீரே             (20)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 42 | சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாதகேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
 விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
 உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றியிருப்பரே             (21)
 | 
 |  | 
		
			|  |  |  |