| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| தாலப் பருவம் | 
					
			
			
      | | 43 | மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
 பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
 மாணிக் குறளனே தாலேலோ
 வையம் அளந்தானே தாலேலோ             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 44 | உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும்
 விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்
 உடையாய் அழேல் அழேல் தாலேலோ
 உலகம் அளந்தானே தாலேலோ            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 45 | என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு
 இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி
 தந்து உவனாய் நின்றான் தாலேலோ
 தாமரைக் கண்ணனே தாலேலோ            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 46 | சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
 அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
 செங்கண் கருமுகிலே தாலேலோ
 தேவகி சிங்கமே தாலேலோ             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 47 | எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
 வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
 தொழுது உவனாய் நின்றான் தாலேலோ
 தூமணி வண்ணனே தாலேலோ             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 48 | ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
 மா தக்க என்று வருணன் விடுதந்தான்
 சோதிச் சுடர் முடியாய் தாலேலோ
 சுந்தரத் தோளனே தாலேலோ             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 49 | கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
 தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
 கோனே அழேல் அழேல் தாலேலோ
 குடந்தைக் கிடந்தானே தாலேலோ             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 50 | கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
 அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்
 நச்சுமுலை உண்டாய் தாலேலோ
 நாராயணா அழேல் தாலேலோ            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 51 | மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
 வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
 ஐயா அழேல் அழேல் தாலேலோ
 அரங்கத்து அணையானே தாலேலோ            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 52 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
 செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
 எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |