முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| தாலப் பருவம் |
| 43 | மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ (1) | |
|
| |
|
|
| 44 | உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும் விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ (2) | |
|
| |
|
|
| 45 | என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ (3) | |
|
| |
|
|
| 46 | சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ (4) | |
|
| |
|
|
| 47 | எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழு இல் கொடையான் வயிச்சிரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ (5) | |
|
| |
|
|
| 48 | ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் மா தக்க என்று வருணன் விடுதந்தான் சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ (6) | |
|
| |
|
|
| 49 | கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ (7) | |
|
| |
|
|
| 50 | கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் நச்சுமுலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ (8) | |
|
| |
|
|
| 51 | மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ (9) | |
|
| |
|
|
| 52 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே (10) | |
|
| |
|
|