முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| அம்புலிப் பருவம் |
| 53 | தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப் பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ (1) |
|
|
| |
|
|
| 54 | என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான் தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா (2) |
|
|
| |
|
|
| 55 | சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா (3) |
|
|
| |
|
|
| 56 | சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலைமேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண் தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் (4) |
|
|
| |
|
|
| 57 | அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல் புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ (5) |
|
|
| |
|
|
| 58 | தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங் காவிடில் விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா (6) |
|
|
| |
|
|
| 59 | பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள் ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
(7) |
|
|
| |
|
|
| 60 | சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண் நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான் (8) |
|
|
| |
|
|
| 61 | தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான் ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண் வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா
(9) |
|
|
| |
|
|
| 62 | மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே (10) | |
|
| |
|
|