| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| சப்பாணிப் பருவம் | 
					
			
			
      | | 74 | மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி
 பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு
 காணி கொண்ட கைகளால் சப்பாணி
 கருங்குழற் குட்டனே சப்பாணி             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 75 | பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட
 என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம்
 மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி
 மாயவனே கொட்டாய் சப்பாணி             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 76 | பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன என் மணிவண்ணன் இலங்கு பொற் தோட்டின் மேல்
 நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மைதன்
 அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி
 ஆழியங் கையனே சப்பாணி             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 77 | தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
 நீ நிலா நிற் புகழாநின்ற ஆயர்தம்
 கோ நிலாவ கொட்டாய் சப்பாணி
 குடந்தைக் கிடந்தானே சப்பாணி             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 78 | புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
 சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
 பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
 பற்பநாபா கொட்டாய் சப்பாணி            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 79 | தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப்
 பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
 தேர் உய்த்த கைகளால் சப்பாணி
 தேவகி சிங்கமே சப்பாணி            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 80 | பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக்
 கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
 சரந் தொட்ட கைகளால் சப்பாணி
 சார்ங்க விற்கையனே சப்பாணி            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 81 | குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
 அரக்கர் அவிய அடு கணையாலே
 நெருக்கிய கைகளால் சப்பாணி
 நேமியங் கையனே சப்பாணி             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 82 | அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
 உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம்
 பிளந்திட்ட கைகளால் சப்பாணி
 பேய் முலை உண்டானே சப்பாணி            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 83 | அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
 வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
 கடைந்திட்ட கைகளால் சப்பாணி
 கார்முகில் வண்ணனே சப்பாணி            (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 84 | ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
 வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
 வேட்கையினால் சொல்லுவார் வினை போதுமே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |