முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
தளர்நடைப் பருவம் |
85 | தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப் படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ (1) | |
|
|
|
|
86 | செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும் சிறுபிறை முளைப் போல நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே நளிர் வெண்பல் முளை இலக அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ (2) | |
|
|
|
|
87 | மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய்ப் பின்னற் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும் மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக் கழுத்தினிற் காறையொடும் தன்னிற் பொலிந்த இருடிகேசன் தளர்நடை நடவானோ (3) | |
|
|
|
|
88 | கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக் கணகண சிரித்து உவந்து முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில்வண்ணன் திருமார்வன் தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ (4) | |
|
|
|
|
89 | முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்து ஓடப் பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப் பலதேவன் என்னும் தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான் தளர்நடை நடவானோ (5) |
|
|
|
|
|
90 | ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்து பெய்து தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ (6) | |
|
|
|
|
91 | படர் பங்கைய மலர்வாய் நெகிழப் பனி படு சிறுதுளி போல் இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழநின்று கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடை மணி கணகணென தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி தளர்நடை நடவானோ (7) |
|
|
|
|
|
92 | பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி அல்குல் புடை பெயர மக்கள் உலகினிற் பெய்து அறியா மணிக் குழவி உருவின் தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ (8) | |
|
|
|
|
93 | வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கருங்கன்று போல் தெண் புழுதியாடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ (9) | |
|
|
|
|
94 | திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச் செங்கண்மால் கேசவன் தன் திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர்ச் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ (10) | |
|
|
|
|
95 | ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன் தன்னைத் தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார் மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே (11) | |
|
|
|
|