முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
அச்சோப் பருவம் |
96 | பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித் தன் இயல் ஓசை சலன்-சலன் என்றிட மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல் என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (1) | |
|
|
|
|
97 | செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2) | |
|
|
|
|
98 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3) | |
|
|
|
|
99 | நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி அவளும் திருவுடம்பிற் பூச ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று ஏற உருவினாய் அச்சோ அச்சோ எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (4) | |
|
|
|
|
100 | கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலை பெரிது உடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ அச்சோ ஆழி அங் கையனே அச்சோ அச்சோ (5) | |
|
|
|
|
101 | போர் ஒக்கப் பண்ணி இப் பூமிப்பொறை தீர்ப்பான் தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் கார் ஒக்கு மேனிக் கரும் பெருங் கண்ணனே ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6) | |
|
|
|
|
102 | மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியிற் தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7) | |
|
|
|
|
103 | என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ அச்சோ வேங்கடவாணனே அச்சோ அச்சோ (8) | |
|
|
|
|
104 | கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9) | |
|
|
|
|
105 | துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப் பின் இவ் உலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ (10) | |
|
|
|
|
106 | நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே (11) | |
|
|
|
|