| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| புறம் புல்கல் | 
					
			
			
      | | 107 | வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க- மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
 சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
 குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
 கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 108 | கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினிற் கங்கணம் இட்டுக் கழுத்திற் தொடர் கட்டித்
 தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
 என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்
 எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 109 | கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
 கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
 அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
 ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 110 | நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்
 வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர்
 ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்
 உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 111 | வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக் கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப்
 பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு
 மண் பல கொண்டான் புறம்புல்குவான்
 வாமனன் என்னைப் புறம்புல்குவான் (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 112 | சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்
 கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
 பத்திராகாரன் புறம்புல்குவான்
 பார் அளந்தான் என் புறம்புல்குவான் (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 113 | பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
 மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
 அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
 ஆழியான் என்னைப் புறம்புல்குவான் (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 114 | மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
 வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
 ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்
 எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 115 | கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
 நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
 உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்
 உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 116 | ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
 ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
 வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |