முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| கண்ணன் அப்பூச்சி காட்டுதல் |
| 117 | மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி பொய்ச் சூதிற் தோற்ற பொறை உடை மன்னர்க்காய் பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (1) | |
|
| |
|
|
| 118 | மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (2) | |
|
| |
|
|
| 119 | காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன் தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (3) | |
|
| |
|
|
| 120 | இருட்டிற் பிறந்து போய் ஏழை வல் ஆயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (4) | |
|
| |
|
|
| 121 | சேப் பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (5) | |
|
| |
|
|
| 122 | செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச் சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (6) | |
|
| |
|
|
| 123 | தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ? சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம் கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (7) | |
|
| |
|
|
| 124 | கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (8) | |
|
| |
|
|
| 125 | பதக முதலைவாய்ப் பட்ட களிறு கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (9) | |
|
| |
|
|
| 126 | வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த வில்லாளனை விட்டுசித்தன் விரித்த சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே (10) | |
|
| |
|
|