முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| தாய்ப்பால் உண்ண அழைத்தல் |
| 127 | அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயிலெழாயே இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் திரு உடைய வாய்மடுத்துத் திளைத்து உதைத்துப் பருகிடாயே (1) | |
|
| |
|
|
| 128 | வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய்; ஏதும் செய்யேன் கதம் படாதே முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறிஞ்சி முலை உணாயே (2) | |
|
| |
|
|
| 129 | தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் வந்து நின்மேற் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா உந்தையார் உன்திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன் நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே (3) | |
|
| |
|
|
| 130 | கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கு அழிய பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே (4) | |
|
| |
|
|
| 131 | தீய புந்திக் கஞ்சன் உன்மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து மாயந்தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போகவேண்டா ஆயர் பாடிக்கு அணிவிளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே (5) | |
|
| |
|
|
| 132 | மின் அனைய நுண் இடையார் விரி குழல்மேல் நுழைந்த வண்டு இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா முலை உணாயே (6) | |
|
| |
|
|
| 133 | பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி வண்டு உலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே (7) | |
|
| |
|
|
| 134 | இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு இரு முலையும் முறை முறையாய் ஏங்கி ஏங்கி இருந்து உணாயே (8) | |
|
| |
|
|
| 135 | அங் கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல் செங் கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே (9) | |
|
| |
|
|
| 136 | ஓட ஓடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன் ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி ஓடி ஒடிப் போய்விடாதே உத்தமா நீ முலை உணாயே (10) | |
|
| |
|
|
| 137 | வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப் பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே (11) | |
|
| |
|
|