முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| காப்பிடல் |
| 191 | இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் (1) | |
|
| |
|
|
| 192 | கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப் போது மதிற் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் (2) | |
|
| |
|
|
| 193 | செப்பு ஓது மென்முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் முப் போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் (3) | |
|
| |
|
|
| 194 | கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு -இவர் ஆர்?- முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரொடே தீமை செய்வாய் வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் (4) | |
|
| |
|
|
| 195 | பல்லாயிரவர் இவ் ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச் சொப்படக் காப்பிட வாராய் (5) | |
|
| |
|
|
| 196 | கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கரு நிறச் செம் மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ் மணி மாட மதிற் திருவெள்ளறை நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் 6 | |
|
| |
|
|
| 197 | கள்ளச் சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த பிள்ளையரசே நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் (7) | |
|
| |
|
|
| 198 | இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிது ஓடிக் காப்பிட வாராய் (8) | |
|
| |
|
|
| 199 | இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் திருக்காப்பு நான் உன்னைச் சாத்த தேசு உடை வெள்ளறை நின்றாய் உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் (9) | |
|
| |
|
|
| 200 | போது அமர் செல்வக்கொழுந்து புணர் திருவெள்ளறையானை மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே (10) | |
|
| |
|
|