முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல் |
| 233 | அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின்பின் என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (1) | |
|
| |
|
|
| 234 | பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (2) | |
|
| |
|
|
| 235 | நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும் பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே கல்மணி நின்று அதிர் கான்- அதரிடைக் கன்றின்பின் என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே (3) | |
|
| |
|
|
| 236 | வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப் பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின் எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே (4) | |
|
| |
|
|
| 237 | அவ்வவ் இடம் புக்கு அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வும் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (5) | |
|
| |
|
|
| 238 | மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப் படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே கடிறு பல திரி கான் -அதரிடைக் கன்றின் பின் இடற என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே (6) | |
|
| |
|
|
| 239 | வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத் துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி உணங்கு வெங்கான் -அதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (7) | |
|
| |
|
|
| 240 | பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால் என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின் என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே (8) | |
|
| |
|
|
| 241 | குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக் கடிய வெங் கானிடைக் கால்- அடி நோவக் கன்றின் பின் கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்:எல்லே பாவமே (9) | |
|
| |
|
|
| 242 | என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக் கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே (10) | |
|
| |
|
|