முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல் |
| 243 | சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும் குளிர் முத்தின் கோடாலமும் காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை (1) | |
|
| |
|
|
| 244 | கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம் மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என்குட்டனே முத்தம் தா (2) | |
|
| |
|
|
| 245 | காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடற்பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன் உடம்பு பேடை மயிற் சாயற் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் (3) | |
|
| |
|
|
| 246 | கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும் போரேறே நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக்குட்டச் செங் கமல- அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் (4) | |
|
| |
|
|
| 247 | பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செங்கண் மாலே சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய் கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்து உடன் வந்தாய் போலும் (5) | |
|
| |
|
|
| 248 | அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன் என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்? ஏதும் ஓர் அச்சம் இல்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் (6) | |
|
| |
|
|
| 249 | பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல் வண்ணா உன்மேல் கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மைச் சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்ஙனம் ஆவர்களே (7) | |
|
| |
|
|
| 250 | கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் (8) | |
|
| |
|
|
| 251 | திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்;முன் பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன் கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன் கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு (9) | |
|
| |
|
|
| 252 | புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனைக் கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புது வை விட்டுசித்தன் சொல் கற்று இவை பாட வல்லார் கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (10) | |
|
| |
|
|