| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| நற்றாய் இரங்கல் | 
					
			
			
      | | 285 | ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய்ச்
 செய்ய நூலின் சிற்றாடை செப்பன்
 உடுக்கவும் வல்லள் அல்லள்
 கையினில் சிறுதூதை யோடு இவள்
 முற்றில் பிரிந்தும் இலள்
 பை அரவணைப் பள்ளியானொடு
 கைவைத்து இவள்வருமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 286 | வாயிற் பல்லும் எழுந்தில மயி ரும் முடி கூடிற்றில
 சாய்வு இலாத குறுந்தலைச் சில
 பிள்ளைகளோடு இணங்கி
 தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
 தன் அன்ன செம்மை சொல்லி
 மாயன் மா மணிவண்ணன்மேல் இவள்
 மால் உறுகின்றாளே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 287 | பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
 சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்
 அல்லது இழைக்கலுறாள்
 கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
 கோவிந்தனோடு இவளைச்
 சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
 தட்டுளுப்பு ஆகின்றதே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 288 | ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி
 தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த
 சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
 ஆழியான் என்னும் ஆழ மோழையில்
 பாய்ச்சி அகப்படுத்தி
 மூழை உப்பு அறியாது என்னும்
 மூதுரையும் இலளே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 289 | நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
 சூடி நாரணன் போம் இடம் எல்லாம்
 சோதித்து உழிதர்கின்றாள்
 கேடு வேண்டுகின்றார் பலர் உளர்
 கேசவனோடு இவளைப்
 பாடிகாவல் இடுமின் என்று என்று
 பார் தடுமாறினதே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 290 | பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும்
 இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு
 என்னோடு இருக்கலுறாள்
 பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்
 பூவைப் பூவண்ணா என்னும்
 வட்ட வார் குழல் மங்கைமீர் இவள்
 மால் உறுகின்றாளே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 291 | பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
 கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்
 கோல் கழிந்தான் மூழையாய்
 கேசவா என்றும் கேடிலீ என்றும்
 கிஞ்சுக வாய் மொழியாள்
 வாச வார்குழல் மங்கைமீர் இவள்
 மால் உறுகின்றாளே 7
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 292 | காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
 கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
 கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
 தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
 தேவன் திறம் பிதற்றும்
 மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
 மால் உறுகின்றாளே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 293 | கைத்தலத்து உள்ள மாடு அழியக் கண்ணாலங்கள் செய்து இவளை-
 வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
 நம்மை வடுப்படுத்தும்-
 செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
 செய்வன செய்துகொள்ள
 மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
 வளர விடுமின்களே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 294 | பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே
 இருத்துவான் எண்ணி நாம் இருக்க
 இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
 மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
 வார்த்தை படுவதன்முன்
 ஒருப்படுத்து இடுமின் இவளை
 உலகளந்தான் இடைக்கே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 295 | ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாராயணனுக்கு இவள்
 மாலதாகி மகிழ்ந்தனள் என்று
 தாய் உரை செய்ததனை
 கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்
 விட்டுசித்தன் சொன்ன
 மாலை பத்தும் வல்லவர்கட்கு
 இல்லை வரு துயரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |