| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி ஏங்குதல் | 
					
			
			
      | | 296 | நல்லது ஓர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனி சோர
 அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
 அழகழிந்தால் ஒத்ததாலோ
 இல்லம் வெறியோடிற்றாலோ
 என்மகளை எங்கும் காணேன்
 மல்லரை அட்டவன் பின்போய்
 மதுரைப் புறம் புக்காள் கொல்லோ? (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 297 | ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறைக் கோபாலர் தங்கள்
 கன்று கால் மாறுமா போலே
 கன்னி இருந்தாளைக் கொண்டு
 நன்றும் கிறி செய்து போனான்
 நாராயணன் செய்த தீமை
 என்றும் எமர்கள் குடிக்கு ஓர்
 ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ? (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 298 | குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி
 தமரும் பிறரும் அறியத்
 தாமோதரற்கு என்று சாற்றி
 அமரர் பதியுடைத் தேவி
 அரசாணியை வழிபட்டு
 துமிலம் எழப் பறை கொட்டித்
 தோரணம் நாட்டிடுங் கொல்லோ?            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 299 | ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
 திருமகள் போல வளர்த்தேன்
 செங்கண் மால் தான் கொண்டு போனான்
 பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
 பெரும்பிள்ளை பெற்ற அசோதை
 மருமகளைக் கண்டு உகந்து
 மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 300 | தம் மாமன் நந்தகோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
 செம்மாந்திரே என்று சொல்லி
 செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்
 கொம்மை முலையும் இடையும்
 கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
 இம் மகளைப் பெற்ற தாயர்
 இனித் தரியார் என்னுங் கொல்லோ?             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 301 | வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என்மகளைக்
 கூடிய கூட்டமே யாகக்
 கொண்டு குடி வாழுங் கொல்லோ?
 நாடும் நகரும் அறிய
 நல்லது ஓர் கண்ணாலம் செய்து
 சாடு இறப் பாய்ந்த பெருமான்
 தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 302 | அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என்மகளைப்
 பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
 பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
 கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து
 கோவலப் பட்டம் கவித்துப்
 பண்டை மணாட்டிமார் முன்னே
 பாதுகாவல் வைக்குங் கொல்லோ?            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 303 | குடியிற் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
 நடை ஒன்றும் செய்திலன் நங்காய்
 நந்தகோபன் மகன் கண்ணன்
 இடை இருபாலும் வணங்க
 இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்
 கடைகயிறே பற்றி வாங்கிக்
 கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 304 | வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து
 கண் உறங்காதே இருந்து
 கடையவும் தான்வல்லள் கொல்லோ?
 ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
 உலகளந்தான் என்மகளைப்
 பண் அறையாப் பணிகொண்டு
 பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 305 | மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
 தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன
 தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |