முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
உந்தி பறத்தல் |
306 | என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என் நாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற (1) | |
|
|
|
|
307 | என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற (2) | |
|
|
|
|
308 | உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3) | |
|
|
|
|
309 | மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற (4) | |
|
|
|
|
310 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5) | |
|
|
|
|
311 | முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6) | |
|
|
|
|
312 | காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் தோள்-வலி வீரமே பாடிப் பற தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7) | |
|
|
|
|
313 | தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம் நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8) | |
|
|
|
|
314 | மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற (9) | |
|
|
|
|
315 | காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10) |
|
|
|
|
|
316 | நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல் செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல் ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே (11) |
|
|
|
|
|