| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| உந்தி பறத்தல் | 
					
			
			
      | | 306 | என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை
 வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
 என் நாதன் வன்மையைப் பாடிப் பற
 எம்பிரான் வன்மையைப் பாடிப் பற            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 307 | என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
 முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
 தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
 தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 308 | உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
 செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
 சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
 தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 309 | மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
 கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
 சீற்றம் இலாதானைப் பாடிப் பற
 சீதை மணாளனைப் பாடிப் பற (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 310 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
 அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
 அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
 அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 311 | முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
 படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
 அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
 அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 312 | காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
 மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
 தோள்-வலி வீரமே பாடிப் பற
 தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 313 | தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம் நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
 சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
 ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
 அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 314 | மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
 வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
 ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
 ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 315 | காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
 நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
 ஆராவமுதனைப் பாடிப் பற
 அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 316 | நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
 செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
 ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே (11)
 | 
 |  | 
		
			|  |  |  |