முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம் |
317 | நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச் செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் (1) | |
|
|
|
|
318 | அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2) | |
|
|
|
|
319 | கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக் குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3) | |
|
|
|
|
320 | வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற் சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (4) | |
|
|
|
|
321 | மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம் கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத் தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப் பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் (5) | |
|
|
|
|
322 | சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் (6) | |
|
|
|
|
323 | மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம் பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப் பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் (7) | |
|
|
|
|
324 | மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான் இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (8) | |
|
|
|
|
325 | திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல் வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே (9) | |
|
|
|
|
326 | வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார் ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே (10) | |
|
|
|
|