முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| திருமாலிருஞ்சோலை-1 |
| 337 | அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன் மலை சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ- மகளிர்கள் ஆடும் சீர்ச் சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே (1) | |
|
| |
|
|
| 338 | வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே (2) | |
|
| |
|
|
| 339 | தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத் தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே (3) | |
|
| |
|
|
| 340 | ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே (4) | |
|
| |
|
|
| 341 | ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல்வண்ணன் திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே (5) | |
|
| |
|
|
| 342 | ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை ஆவத்-தனம் என்று அமரர்களும் நன் முனிவரும் சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே (6) | |
|
| |
|
|
| 343 | மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற் கோன் தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே (7) | |
|
| |
|
|
| 344 | குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ் சோலையே (8) | |
|
| |
|
|
| 345 | சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத்-தனம் செய் அப்பன் மலை இந்திர-கோபங்கள் எம்பெருமான் கனி- வாய் ஒப்பான் சிந்தும் புறவிற் தென் திருமாலிருஞ் சோலையே (9) | |
|
| |
|
|
| 346 | எட்டுத் திசையும் எண்- இறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த் தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே (10) | |
|
| |
|
|
| 347 | மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக் கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் கருதி உரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பரே (11) | |
|
| |
|
|