| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| திருமாலின் நாமம் இடுதல் | 
					
			
			
      | | 380 | காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும் ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
 கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ
 நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 381 | அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால் மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள்
 செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
 நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 382 | உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்?
 பிச்சை புக்கு ஆகிலும் எம்பிரான் திருநாமமே
 நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 383 | மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
 வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
 நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 384 | மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
 குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
 நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 385 | நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக் கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
 சாடு இறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
 நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 386 | மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
 கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே
 நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 387 | நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்
 செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால்
 நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 388 | ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு
 கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ
 நாத் தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 389 | சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த சொல்
 ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
 பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |