முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
திருவரங்கம் (2) |
411 | மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழச் செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில் திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே (1) |
|
|
|
|
|
412 | தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2) | |
|
|
|
|
413 | கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு ஓசை கேட்டான் இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3) | |
|
|
|
|
414 | பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும் மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற் பூவே போல்வான் பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே (4) | |
|
|
|
|
415 | ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே (5) | |
|
|
|
|
416 | மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (6) | |
|
|
|
|
417 | குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு-அணையின் சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7) | |
|
|
|
|
418 | உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச் சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண் அரங்கமே (8) | |
|
|
|
|
419 | தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி குறளும் ஆகி மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப் பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே (9) | |
|
|
|
|
420 | செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும் நாந்தம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன் இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப் பெரும் பேராளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே (10) | |
|
|
|
|
421 | கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்பதியின் மேல் மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே (11) | |
|
|
|
|