முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| பண்டன்று பட்டினம் காப்பே |
| 442 | நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின் மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பு- அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே (1) | |
|
| |
|
|
| 443 | சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக் கோன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஒளித்தார் முத்துத் திரைக் கடற் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே (2) | |
|
| |
|
|
| 444 | வயிற்றிற் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை அதக்கிக் கயிற்றும் அக்கு ஆணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே (3) | |
|
| |
|
|
| 445 | மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிது அன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் பங்கப்படாது உய்யப் போமின் பண்டு அன்று பட்டினம் காப்பே (4) | |
|
| |
|
|
| 446 | மாணிக் குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர் பாணிக்க வேண்டா நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே (5) | |
|
| |
|
|
| 447 | உற்ற உறுபிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே (6) | |
|
| |
|
|
| 448 | கொங்கைச் சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்து உழல்வேனை வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றிப் பங்கப் படாவண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே (7) | |
|
| |
|
|
| 449 | ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே பீதக வாடைப் பிரனார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் திடரிற் பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே (8) | |
|
| |
|
|
| 450 | உறகல் உறகல் உறகல் ஒண்சுடர் ஆழியே சங்கே அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொண்மின் (9) | |
|
| |
|
|
| 451 | அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானைப் பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவற் பொருட்டே (10) | |
|
| |
|
|