| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| பண்டன்று பட்டினம் காப்பே | 
					
			
			
      | | 442 | நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
 கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
 காலம் பெற உய்யப் போமின்
 மெய்க் கொண்டு வந்து புகுந்து
 வேதப் பிரானார் கிடந்தார்
 பைக் கொண்ட பாம்பு- அணையோடும்
 பண்டு அன்று பட்டினம் காப்பே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 443 | சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக் கோன் பொறி ஒற்றி
 வைத்த இலச்சினை மாற்றித்
 தூதுவர் ஓடி ஒளித்தார்
 முத்துத் திரைக் கடற் சேர்ப்பன்
 மூதறிவாளர் முதல்வன்
 பத்தர்க்கு அமுதன் அடியேன்
 பண்டு அன்று பட்டினம் காப்பே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 444 | வயிற்றிற் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை அதக்கிக்
 கயிற்றும் அக்கு ஆணி கழித்துக்
 காலிடைப் பாசம் கழற்றி
 எயிற்றிடை மண்கொண்ட எந்தை
 இராப்பகல் ஓதுவித்து என்னைப்
 பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்
 பண்டு அன்று பட்டினம் காப்பே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 445 | மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
 இங்குப் புகேன்மின் புகேன்மின்
 எளிது அன்று கண்டீர் புகேன்மின்
 சிங்கப் பிரான் அவன் எம்மான்
 சேரும் திருக்கோயில் கண்டீர்
 பங்கப்படாது உய்யப் போமின்
 பண்டு அன்று பட்டினம் காப்பே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 446 | மாணிக் குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே
 பேணிக் கொணர்ந்து புகுத
 வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி
 மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
 வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
 பாணிக்க வேண்டா நடமின்
 பண்டு அன்று பட்டினம் காப்பே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 447 | உற்ற உறுபிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
 பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
 பேணும் திருக்கோயில் கண்டீர்
 அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
 ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர்
 பற்றில்லை கண்டீர் நடமின்
 பண்டு அன்று பட்டினம் காப்பே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 448 | கொங்கைச் சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
 அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு
 அழுந்திக் கிடந்து உழல்வேனை
 வங்கக் கடல் வண்ணன் அம்மான்
 வல்வினை ஆயின மாற்றிப்
 பங்கப் படாவண்ணம் செய்தான்
 பண்டு அன்று பட்டினம் காப்பே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 449 | ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே
 பீதக வாடைப் பிரனார்
 பிரம குருவாகி வந்து
 போதில் கமல வன் நெஞ்சம்
 புகுந்து என் சென்னித் திடரிற்
 பாத இலச்சினை வைத்தார்
 பண்டு அன்று பட்டினம் காப்பே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 450 | உறகல் உறகல் உறகல் ஒண்சுடர் ஆழியே சங்கே
 அற எறி நாந்தக வாளே
 அழகிய சார்ங்கமே தண்டே
 இறவு படாமல் இருந்த
 எண்மர் உலோகபாலீர்காள்
 பறவை அரையா உறகல்
 பள்ளியறை குறிக்கொண்மின்            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 451 | அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
 அரவிந்தப் பாவையும் தானும்
 அகம்படி வந்து புகுந்து
 பரவைத் திரை பல மோதப்
 பள்ளி கொள்கின்ற பிரானைப்
 பரவுகின்றான் விட்டுசித்தன்
 பட்டினம் காவற் பொருட்டே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |