| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித்தல் | 
					
			
			
      | | 462 | சென்னி ஓங்கு தண் திருவேங் கடம் உடையாய் உலகு
 தன்னை வாழ நின்ற நம்பீ
 தாமோதரா சதிரா
 என்னையும் என் உடைமையையும் உன்
 சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
 நின் அருளே புரிந்திருந்தேன்
 இனி என் திருக்குறிப்பே?               (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 463 | பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக்கொண்டபின்
 பிறவி என்னும் கடலும் வற்றிப்
 பெரும்பதம் ஆகின்றதால்
 இறவு செய்யும் பாவக் காடு
 தீக்கொளீஇ வேகின்றதால்
 அறிவை என்னும் அமுத-ஆறு
 தலைப்பற்றி வாய்க்கொண்டதே (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 464 | எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே
 நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்
 உலகினில் ஆர் பெறுவார்?
 நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
 நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
 சும்மெனாதே கைவிட்டு ஓடித்
 தூறுகள் பாய்ந்தனவே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 465 | கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்
 உடல் உருகி வாய் திறந்து
 மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
 கொடுமை செய்யும் கூற்றமும் என்
 கோல்-ஆடி குறுகப் பெறா
 தட வரைத் தோள் சக்கரபாணீ
 சார்ங்க விற் சேவகனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 466 | பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தாற் போல்
 உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
 மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
 உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
 என்னையும் உன்னில் இட்டேன்
 என் அப்பா என் இருடீகேசா
 என் உயிர்க் காவலனே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 467 | உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம்
 என்னுடைய நெஞ்சகம்பால்
 சுவர்வழி எழுதிக்கொண்டேன்
 மன் அடங்க மழு வலங்கைக்
 கொண்ட இராம நம்பீ
 என்னிடை வந்து எம்பெருமான்
 இனி எங்குப் போகின்றதே?            (6) 6
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 468 | பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
 திருப் பொலிந்த சேவடி என்
 சென்னியின் மேல் பொறித்தாய்
 மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
 என்று என்று உன் வாசகமே
 உருப் பொலிந்த நாவினேனை
 உனக்கு உரித்து ஆக்கினையே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 469 | அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐது நொய்தாக வைத்து என்
 மனந்தனுள்ளே வந்து வைகி
 வாழச் செய்தாய் எம்பிரான்
 நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
 கண்கள் அசும்பு ஒழுக
 நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
 நேமி நெடியவனே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 470 | பனிக் கடலில் பள்ளி- கோளைப் பழகவிட்டு ஓடிவந்து என்
 மனக் கடலில் வாழ வல்ல
 மாய மணாள நம்பீ
 தனிக் கடலே தனிச் சுடரே
 தனி உலகே என்று என்று
 உனக்கு இடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 471 | தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
 சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
 தோன்றும் என் சோதி நம்பீ
 வட தடமும் வைகுந்தமும்
 மதிற் துவராபதியும்
 இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
 இடவகை கொண்டனையே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 472 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே
 கோயில்கொண்ட கோவலனைக்
 கொழுங்குளிர் முகில்வண்ணனை
 ஆயர்-ஏற்றை அமரர் கோவை
 அந்தணர்தம் அமுதத்தினைச்
 சாயை போலப் பாட வல்லார்
 தாமும் அணுக்கர்களே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |