| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| துகிலைப் பணித்தருள் எனல் | 
					
			
			
      | | 523 | கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
 ஆழியஞ் செல்வன் எழுந்தான்
 அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய்
 ஏழைமை ஆற்றவும் பட்டோம்
 இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
 தோழியும் நானும் தொழுதோம்
 துகிலைப் பணித்தருளாயே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 524 | இது என் புகுந்தது இங்கு? அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
 மதுவின் துழாய் முடி மாலே
 மாயனே எங்கள் அமுதே
 விதி இன்மையால் அது மாட்டோம்
 வித்தகப் பிள்ளாய் விரையேல்
 குதிகொண்டு அரவில் நடித்தாய்
 குருந்திடைக் கூறை பணியாய்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 525 | எல்லே ஈது என்ன இளமை? எம் அனைமார் காணில் ஒட்டார்
 பொல்லாங்கு ஈது என்று கருதாய்
 பூங்குருந்து ஏறி இருத்தி
 வில்லால் இலங்கை அழித்தாய்
 வேண்டியது எல்லாம் தருவோம்
 பல்லாரும் காணாமே போவோம்
 பட்டைப் பணித்தருளாயே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 526 | பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில்
 அரக்க நில்லா கண்ண நீர்கள்
 அலமருகின்றவா பாராய்
 இரக்கமேல் ஒன்றும் இலாதாய்
 இலங்கை அழித்த பிரானே
 குரக்கு-அரசு ஆவது அறிந்தோம்
 குருந்திடைக் கூறை பணியாய் 4
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 527 | காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
 வேலைப் பிடித்து என்னைமார்கள்
 ஓட்டில் என்ன விளையாட்டோ?
 கோலச் சிற்றாடை பலவும்
 கொண்டு நீ ஏறியிராதே
 கோலம் கரிய பிரானே
 குருந்திடைக் கூறை பணியாய்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 528 | தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
 விடத் தேள் எறிந்தாலே போல
 வேதனை ஆற்றவும் பட்டோம்
 குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
 கூத்தாட வல்ல எம் கோவே
 படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
 பட்டைப் பணித்தருளாயே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 529 | நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி-அல்லாதன செய்தாய்
 ஊரகம் சாலவும் சேய்த்தால்
 ஊழி எல்லாம் உணர்வானே
 ஆர்வம் உனக்கே உடையோம்
 அம்மனைமார் காணில் ஒட்டார்
 போர விடாய் எங்கள் பட்டைப்
 பூங்குருந்து ஏறியிராதே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 530 | மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
 தூமலர்க் கண்கள் வளரத்
 தொல்லை இராத் துயில்வானே
 சேமமேல் அன்று இது சால
 சிக்கென நாம் இது சொன்னோம்
 கோமள ஆயர் கொழுந்தே
 குருந்திடைக் கூறை பணியாய்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 531 | கஞ்சன் வலைவைத்த அன்று காரிருள் எல்லிற் பிழைத்து
 நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்
 நின்ற இக் கன்னியரோமை
 அஞ்ச உரப்பாள் அசோதை
 ஆணாட விட்டிட்டு இருக்கும்
 வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட
 மசிமையிலீ கூறை தாராய்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 532 | கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டைப்
 பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த
 புதுவையர்கோன் பட்டன் கோதை
 இன்னிசையால் சொன்ன மாலை
 ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
 மன்னிய மாதவனோடு
 வைகுந்தம் புக்கு இருப்பாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |