முதல் ஆயிரம் ஆண்டாள் நாச்சியார் திருமொழி
|
கூடல் இழைத்தல் |
533 | தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (1) | |
|
|
|
|
534 | காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும் கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே (2) | |
|
|
|
|
535 | பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன் அணி வாணுதல் தேவகி மா மகன் மிகு சீர் வசுதேவர்தம் கோமகன் வரில் கூடிடு கூடலே (3) | |
|
|
|
|
536 | ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய கூத்தனார் வரில் கூடிடு கூடலே (4) | |
|
|
|
|
537 | மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மா மத யானை உதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே (5) | |
|
|
|
|
538 | அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற் செற்றவன் திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் வரில் கூடிடு கூடலே (6) | |
|
|
|
|
539 | அன்று இன்னாதன செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே (7) | |
|
|
|
|
540 | ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே (8) | |
|
|
|
|
541 | கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மாவலிதன் பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே (9) | |
|
|
|
|
542 | பழகு நான்மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே (10) | |
|
|
|
|
543 | ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழற் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே (11) | |
|
|
|
|