| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| கூடல் இழைத்தல் | 
					
			
			
      | | 533 | தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
 பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
 கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 534 | காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
 ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும்
 கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 535 | பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன் அணி வாணுதல் தேவகி
 மா மகன் மிகு சீர் வசுதேவர்தம்
 கோமகன் வரில் கூடிடு கூடலே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 536 | ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து
 வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய
 கூத்தனார் வரில் கூடிடு கூடலே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 537 | மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
 ஓடை மா மத யானை உதைத்தவன்
 கூடுமாகில் நீ கூடிடு கூடலே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 538 | அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
 செற்றவன் திகழும் மதுரைப் பதிக்
 கொற்றவன் வரில் கூடிடு கூடலே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 539 | அன்று இன்னாதன செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
 வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன்
 கொன்றவன் வரில் கூடிடு கூடலே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 540 | ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக்
 காவலன் கன்று மேய்த்து விளையாடும்
 கோவலன் வரில் கூடிடு கூடலே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 541 | கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மாவலிதன் பெரு வேள்வியில்
 அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
 கொண்டவன் வரில் கூடிடு கூடலே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 542 | பழகு நான்மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
 அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
 குழகனார் வரில் கூடிடு கூடலே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 543 | ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
 கூடலைக் குழற் கோதை முன் கூறிய
 பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |