| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| திருமணக் கனவை உரைத்தல் | 
					
			
			
      | | 555 | வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
 பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
 தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 556 | நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
 கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
 காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 557 | இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
 மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
 அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 558 | நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
 பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
 காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 559 | கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
 மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
 அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 560 | மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
 மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
 கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 561 | வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
 காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
 தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 562 | இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி
 செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
 அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 563 | வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
 அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
 பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 564 | குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
 அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
 மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 565 | ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
 தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
 வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |