முதல் ஆயிரம் ஆண்டாள் நாச்சியார் திருமொழி
|
| திருமணக் கனவை உரைத்தல் |
| 555 | வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (1) | |
|
| |
|
|
| 556 | நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (2) | |
|
| |
|
|
| 557 | இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (3) | |
|
| |
|
|
| 558 | நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக் காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (4) | |
|
| |
|
|
| 559 | கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (5) | |
|
| |
|
|
| 560 | மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் (6) | |
|
| |
|
|
| 561 | வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் (7) | |
|
| |
|
|
| 562 | இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் (8) | |
|
| |
|
|
| 563 | வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப் பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (9) | |
|
| |
|
|
| 564 | குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (10) | |
|
| |
|
|
| 565 | ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே (11) | |
|
| |
|
|