முதல் ஆயிரம் ஆண்டாள் நாச்சியார் திருமொழி
|
மேகவிடு தூது |
576 | விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே? கண்ணீர்கள் முலைக்குவட்டிற் துளி சோரச் சோர்வேனைப் பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே? (1) |
|
|
|
|
|
577 | மா முத்தநிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாளாளன் வார்த்தை என்னே? காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல் ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே? (2) |
|
|
|
|
|
578 | ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே? (3) |
|
|
|
|
|
579 | மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு என் ஆகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள்தோறும் பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே (4) |
|
|
|
|
|
580 | வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர்காள் ஊன் கொண்ட வள்-உகிரால் இரணியனை உடல் இடந்தான் தான் கொண்ட சரி-வளைகள் தருமாகிற் சாற்றுமினே (5) |
|
|
|
|
|
581 | சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர்காள் உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலங் கொண்ட நாரணற்கு என் நடலை-நோய் செப்புமினே (6) |
|
|
|
|
|
582 | சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி-வீழ்ச்சி விண்ணப்பம் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே (7) |
|
|
|
|
|
583 | கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப் போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை வார் காலத்து ஒருநாள் தம் வாசகம் தந்தருளாரே (8) |
|
|
|
|
|
584 | மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பு-அணையான் வார்த்தை என்னே கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்-கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே? (9) |
|
|
|
|
|
585 | நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய் மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே (10) |
|
|
|
|
|