| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல் | 
					
			
			
      | | 586 | சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
 இந்திர கோபங்களே
 எழுந்தும் பரந்திட்டனவால்
 மந்தரம் நாட்டி அன்று
 மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
 சுந்தரத்தோளுடையான்
 சுழலையினின்று உய்துங் கொலோ?            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 587 | போர்க்களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
 தார்க்கொடி முல்லைகளும்
 தவள நகை காட்டுகின்ற
 கார்க்கொள் பிடாக்கள் நின்று
 கழறிச் சிரிக்கத் தரியேன்
 ஆர்க்கு இடுகோ? தோழீ
 அவன் தார் செய்த பூசலையே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 588 | கருவிளை ஒண்மலர்காள் காயா மலர்காள் திருமால்
 உரு-ஒளி காட்டுகின்றீர்
 எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
 திரு விளையாடு திண் தோள்
 திருமாலிருஞ்சோலை நம்பி
 வரிவளை இற் புகுந்து
 வந்திபற்றும் வழக்கு உளதே?             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 589 | பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்
 வம்பக் களங்கனிகாள்
 வண்ணப் பூவை நறுமலர்காள்
 ஐம் பெரும் பாதகர்காள்
 அணி மாலிருஞ்சோலை நின்ற
 எம்பெருமானுடைய
 நிறம் உங்களுக்கு என் செய்வதே?             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 590 | துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
 செங்கண் கருமுகிலின்
 திருவுருப் போல் மலர்மேல்
 தொங்கிய வண்டினங்காள்
 தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
 தங்கு செந்தாமரைகாள்
 எனக்கு ஓர் சரண் சாற்றுமினே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 591 | நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
 நூறு தடாவில் வெண்ணெய்
 வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
 நூறு தடா நிறைந்த
 அக்கார அடிசில் சொன்னேன்
 ஏறு திருவுடையான்
 இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 592 | இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
 ஒன்று நூறாயிரமாக்
 கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
 தென்றல் மணம் கமழும்
 திருமாலிருஞ்சோலை தன்னுள்
 நின்றபிரான் அடியேன்
 மனத்தே வந்து நேர்படிலே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 593 | காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
 மாலின் வரவு சொல்லி
 மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
 சோலைமலைப் பெருமான்
 துவாராபதி எம்பெருமான்
 ஆலின் இலைப் பெருமான்
 அவன் வார்த்தை உரைக்கின்றதே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 594 | கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
 தூங்கு பொன் மாலைகளோடு
 உடனாய் நின்று தூங்குகின்றேன்
 பூங்கொள் திருமுகத்து
 மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
 சார்ங்க வில் நாண்-ஒலியும்
 தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 595 | சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது
 வந்திழியும் சிலம்பாறு
 உடை மாலிருஞ்சோலை நின்ற
 சுந்தரனைச் சுரும்பு ஆர்
 குழற் கோதை தொகுத்து உரைத்த
 செந்தமிழ் பத்தும் வல்லார்
 திருமாலடி சேர்வர்களே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |