| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல் | 
					
			
			
      | | 626 | கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
 புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
 புறம் நின்று அழகு பேசாதே
 பெண்ணின் வருத்தம் அறியாத
 பெருமான் அரையிற் பீதக
 வண்ண ஆடை கொண்டு என்னை
 வாட்டம் தணிய வீசீரே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 627 | பால்-ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
 வேலால் துன்னம் பெய்தாற் போல்
 வேண்டிற்று எல்லாம் பேசாதே
 கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
 குடந்தைக் கிடந்த குடம்-ஆடி
 நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
 நெறி மென் குழல்மேல் சூட்டிரே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 628 | கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
 நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
 நிலையும் தளர்ந்து நைவேனை
 அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
 அவன் மார்வு அணிந்த வனமாலை
 வஞ்சியாதே தருமாகில்
 மார்விற் கொணர்ந்து புரட்டீரே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 629 | ஆரே உலகத்து ஆற்றுவார்? ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும்
 காரேறு உழக்க உழக்குண்டு
 தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
 ஆராவமுதம் அனையான் தன்
 அமுத வாயில் ஊறிய
 நீர்தான் கொணர்ந்து புலராமே
 பருக்கி இளைப்பை நீக்கீரே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 630 | அழிலும் தொழிலும் உருக் காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
 தழுவி முழுசிப் புகுந்து என்னைச்
 சுற்றிச் சுழன்று போகானால்
 தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே
 நெடுமால் ஊதி வருகின்ற
 குழலின் தொளைவாய் நீர் கொண்டு
 குளிர முகத்துத் தடவீரே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 631 | நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
 கொடிய கடிய திருமாலால்
 குளப்புக்கூறு கொளப்பட்டு
 புடையும் பெயரகில்லேன் நான்
 போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
 பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
 போகா உயிர் என் உடம்பையே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 632 | வெற்றிக் கருளக் கொடியான்தன் மீமீது ஆடா உலகத்து
 வெற்ற வெறிதே பெற்ற தாய்
 வேம்பே ஆக வளர்த்தாளே
 குற்றம் அற்ற முலைதன்னைக்
 குமரன் கோலப் பணைத்தோளோடு
 அற்ற குற்றம் அவை தீர
 அணைய அமுக்கிக் கட்டீரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 633 | உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
 கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
 கோவர்த்தனனைக் கண்டக்கால்
 கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
 கொங்கைதன்னைக் கிழங்கோடும்
 அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
 எறிந்து என் அழலைத் தீர்வேனே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 634 | கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
 இம்மைப் பிறவி செய்யாதே
 இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?
 செம்மை உடைய திருமார்வில்
 சேர்த்தானேனும் ஒரு ஞான்று
 மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
 விடைதான் தருமேல் மிக நன்றே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 635 | அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி-விளக்கை
 வில்லி புதுவைநகர் நம்பி
 விட்டுசித்தன் வியன் கோதை
 வில்லைத் தொலைத்த புருவத்தாள்
 வேட்கை உற்று மிக விரும்பும்
 சொல்லைத் துதிக்க வல்லார்கள்
 துன்பக் கடலுள் துவளாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |