| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை | 
					
			
			
      | | 636 | பட்டி மேய்ந்து ஓர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
 இட்டீறு இட்டு விளையாடி
 இங்கே போதக் கண்டீரே?
 இட்டமான பசுக்களை
 இனிது மறித்து நீர் ஊட்டி
 விட்டுக் கொண்டு விளையாட
 விருந்தாவனத்தே கண்டோமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 637 | அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
 குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
 கோவர்த்தனனைக் கண்டீரே?
 கணங்களோடு மின் மேகம்
 கலந்தாற் போல வனமாலை
 மினுங்க நின்று விளையாட
 விருந்தாவனத்தே கண்டோமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 638 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
 ஏலாப் பொய்கள் உரைப்பானை
 இங்கே போதக் கண்டீரே?
 மேலால் பரந்த வெயில்காப்பான்
 வினதை-சிறுவன் சிறகு என்னும்
 மேலாப்பின் கீழ் வருவானை
 விருந்தாவனத்தே கண்டோமே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 639 | கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
 ஈர்த்துக் கொண்டு விளையாடும்
 ஈசன்தன்னைக் கண்டீரே?
 போர்த்த முத்தின் குப்பாயப்
 புகர் மால் யானைக் கன்றே போல்
 வேர்த்து நின்று விளையாட
 விருந்தாவனத்தே கண்டோமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 640 | மாதவன் என் மணியினை வலையிற் பிழைத்த பன்றி போல்
 ஏதும் ஒன்றும் கொளத் தாரா
 ஈசன்தன்னைக் கண்டீரே?
 பீதக-ஆடை உடை தாழ
 பெருங் கார்மேகக் கன்றே போல்
 வீதி ஆர வருவானை
 விருந்தாவனத்தே கண்டோமே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 641 | தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
 புருவ வட்டம் அழகிய
 பொருத்தம் இலியைக் கண்டீரே?
 உருவு கரிதாய் முகம் சேய்தாய்
 உதயப் பருப்பதத்தின்மேல்
 விரியும் கதிரே போல்வானை
 விருந்தாவனத்தே கண்டோமே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 642 | பொருத்தம் உடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானைக்
 கருத்தைப் பிழைத்து நின்ற அக்
 கரு மா முகிலைக் கண்டீரே?
 அருத்தித் தாரா-கணங்களால்
 ஆரப் பெருகு வானம் போல்
 விருத்தம் பெரிதாய் வருவானை
 விருந்தாவனத்தே கண்டோமே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 643 | வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக-ஆடை உடையானை
 அளி நன்கு உடைய திருமாலை
 ஆழியானைக் கண்டீரே?
 களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
 கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
 மிளிர நின்று விளையாட
 விருந்தாவனத்தே கண்டோமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 644 | நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
 வீட்டைப் பண்ணி விளையாடும்
 விமலன்தன்னைக் கண்டீரே?
 காட்டை நாடித் தேனுகனும்
 களிறும் புள்ளும் உடன் மடிய
 வேட்டையாடி வருவானை
 விருந்தாவனத்தே கண்டோமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 645 | பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த பரமன்தன்னைப் பாரின் மேல்
 விருந்தாவனத்தே கண்டமை
 விட்டுசித்தன் கோதை சொல்
 மருந்தாம் என்று தம் மனத்தே
 வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
 பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்
 பிரியாது என்றும் இருப்பாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |