முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
|
| அழகிய மணவாளன்பால் பித்தன் எனல் |
| 667 | மெய் இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் இவ் வையம்தன்னொடும் கூடுவது இல்லை யான் ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே (1) | |
|
| |
|
|
| 668 | நூலின் நேர்-இடையார் திறத்தே நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் ஆலியா அழையா அரங்கா என்று மால் எழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே (2) | |
|
| |
|
|
| 669 | மாரனார் வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும் பாரினாரொடும் கூடுவது இல்லை யான் ஆர-மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நரகாந்தகன் பித்தனே (3) | |
|
| |
|
|
| 670 | உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான் அண்டவாணன் அரங்கன் வன் பேய்-முலை உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே (4) | |
|
| |
|
|
| 671 | தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரொடும் கூடுவது இல்லை யான் ஆதி ஆயன் அரங்கன் அந் தாமரைப் பேதை மா மணவாளன்தன் பித்தனே (5) | |
|
| |
|
|
| 672 | எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன் தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே (6) | |
|
| |
|
|
| 673 | எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச் சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால் அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே (7) | |
|
| |
|
|
| 674 | பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர் பேயனே எவர்க்கும் இது பேசி என் ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே (8) | |
|
| |
|
|
| 675 | அங்கை-ஆழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க் கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே (9) | |
|
| |
|
|