முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
|
| திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல் |
| 676 | ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக் கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (1) | |
676
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 677 | ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன் தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே (2) | |
677
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 678 | பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல் மின் வட்டச் சுடர்-ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும் பொன்-வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே (3) | |
|
| |
|
|
| 679 | ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள் கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துச் செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே (4) | |
|
| |
|
|
| 680 | கம்ப மத யானைக் கழுத்தகத்தின்மேல் இருந்து இன்பு அமரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே (5) | |
|
| |
|
|
| 681 | மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர்தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் தென்ன என வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தேன் ஆவேனே (6) | |
|
| |
|
|
| 682 | வான் ஆளும் மா மதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர்தம் கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன் தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே (7) | |
|
| |
|
|
| 683 | பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும் முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான் வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே (8) | |
|
| |
|
|
| 684 | செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே (9) | |
|
| |
|
|
| 685 | உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன் அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம் பவள-வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே (10) | |
|
| |
|
|
| 686 | மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக் கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன பன்னிய நூற் தமிழ்-வல்லார் பாங்காய பத்தர்களே (11) | |
|
| |
|
|